சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு நிறைவு!

 

சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை: நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களை தயாரித்த இந்தர்குமாரின் ரெதான் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’.  ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சசிகுமாரை வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். 

sasi kumar

1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் நாயகியாக சசிகுமார், மடோனா செபாஸ்ட்டியன் நடித்துள்ளார். மேலும் கலையரசன், சூரி, யோகிபாபு,  ஹரீஷ் பெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமானுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

sasikumar

கடந்த நவம்பர் 12-ம் தேதி காரைக்குடியில் துவங்கிய படப்பிடிப்பு ஒரே கட்டமாக இடைவிடாமல் பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர், குற்றாலம் போன்ற இடங்களில் நடந்து தற்போது பொள்ளாச்சியில் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.