சசிகலா சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய  ஐபிஎஸ் ரூபா பாடகியாக விஸ்வரூபம்! 

 

சசிகலா சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய  ஐபிஎஸ் ரூபா பாடகியாக விஸ்வரூபம்! 

சசிகலா வழக்கில் சிறையில் நடந்த விவகாரங்களை வெளியே கொண்டு வந்தவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா  திடீரென சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். 

சசிகலா சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய  ஐபிஎஸ் ரூபா பாடகியாக விஸ்வரூபம்! 

சசிகலா வழக்கில் சிறையில் நடந்த விவகாரங்களை வெளியே கொண்டு வந்தவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா  திடீரென சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு மத்திய சிறையில் உள்ள சசிகலா சிறையில் ஆடம்பரமாக  வாழ்ந்து வருவதை  வீடியோ ஆதாரங்களின் மூலம் அம்பலப்படுத்தியவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா

டிவி நிகழ்ச்சி ஒன்றில் ரூபா பாடுவதை பார்த்து பேயலதாதா பீமண்ணா கன்னட பட குழுவினர் இவருக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்புக்கொடுத்துள்ளனர். அந்த படத்துக்காக ஒரு பாடலை சமீபத்தில் ரூபா பாடினார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரூபா, “இது டூயட் பாடல் கிடையாது. இந்துஸ்தானி இசையை நான் கற்றிருக்கிறேன். அந்த அனுபவத்திலேயே பாடினேன். 

இப்பாடலுக்காக ஒரு வாரம் பயிற்சி எடுத்து பாடினேன். ஜானகி, லதா மங்கேஸ்கர், வாணி ஜெயராம் ஆகியோரது பாடல்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். சமீபத்தில் ஸ்ரேயா கோஷல் பாடல்களும் என்னை கவர்ந்தன” என்று கூறினார்.