சசிகலா கட்சியில் இல்லை: ஓ.பன்னீர்செல்வம் அதிரடி

 

சசிகலா கட்சியில் இல்லை: ஓ.பன்னீர்செல்வம் அதிரடி

சசிகலா அதிமுக கட்சியில் இல்லை என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை: சசிகலா அதிமுக கட்சியில் இல்லை என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில்  உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் நடப்பாண்டில் 60 லட்சம் தொண்டர்கள் இணைந்துள்ளனர். சசிகலா அதிமுக உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை. எனவே அவர் கட்சியில் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். தினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டார். அவருக்கும் எங்களுக்கு தொடர்பில்லை என்றார்.