சசிகலாவுக்கு உதவும் ஓ.பி.எஸ்… எடப்பாடியை போட்டுக்கொடுத்த அமைச்சர்கள்..!
இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சசிகலாவிற்கு மறைமுகமாக சில உதவிகளை செய்ய முயற்சி வருகிறாராம் ஓபிஎஸ்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் எதிரே சசிகலாவிற்கு பிரத்தியேகமாக வீடு கட்டப்பட்டு வருகிறது. பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தபிறகு இங்குதான் குடியேற போகிறாராம். அநேகமாக வரும் பிப்ரவரி மாதம் அவர் சிறையில் இருந்து ரிலீசாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் கட்டடப் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் கட்டடப் பணிகள் தொடர்பாக சில ஆவணங்களைக் கேட்டு தமிழக அரசு நெருக்கடி கொடுப்பதால் கட்டட பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் முதல்வர் எடப்பாடி தான் என்று சில அமைச்சர்கள் சசிகலா தரப்பிற்கு தகவல் கொடுத்து இருக்கிறார்களாம்.
இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சசிகலாவிற்கு மறைமுகமாக சில உதவிகளை செய்ய முயற்சி வருகிறாராம் ஓபிஎஸ்.