சங்கி அடிப்படைவாதக் கொள்கை நம் முன் கோர முகம் காட்டி நிற்கிறது: அரவிந்த் கெஜ்ரிவால்
காந்தி நினைவு நாள் குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சங்கி அடிப்படைவாதக் கொள்கை நம் முன் கோர முகம் காட்டி நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி: காந்தி நினைவு நாள் குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சங்கி அடிப்படைவாதக் கொள்கை நம் முன் கோர முகம் காட்டி நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
On this 30th day of January, let us not forget the fact that it is the hatred bred by the fundamentalist ideology of Sangh that took away Bapu. Let us also not forget the fact that it is the same ideology that is staring at us with its ugliest face yet, now.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 30, 2019
தேசப்பிதா காந்தியடிகள், நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்ட தினம் (ஜனவரி-30) இன்று. இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜனவரி 30-ஆம் தேதி நாம் மறக்கக் கூடாதா உண்மை என்னவென்றால், காந்தியை நம்மிடம் இருந்து பிரித்துச் சென்றது சங்கிகளின் அடிப்படைவாதக் கொள்கை. அதே கொள்கைதான் இன்று நம் முன் கோர முகம் காட்டி நிற்கிறது என்ற உண்மையையும் மறந்துவிடாதீர்கள் என பதிவு செய்துள்ளார்.