சக்தி வாய்ந்த சனி பிரதோஷத்தை தவறவிடாதீங்க!

 

சக்தி வாய்ந்த சனி பிரதோஷத்தை தவறவிடாதீங்க!

ஒவ்வொரு பிரதோஷ விழாவும் வழிபாட்டுக்கு உரியது தான் என்றால் சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோஷ காலம் மிக சக்தி வாய்ந்தது. `ப்ர’ என்றால் விசேஷமானது என்று பொருள். உலகத்தில் உள்ள எல்லா விசேஷமான தோஷங்களையும் போக்கக்கூடிய ஆற்றல் பிரதோஷத்துக்கு உண்டு. அதனால் தான் பிரதோஷ வேளைகளில் சிவனை வழிபடுகிறோம்.

ஒவ்வொரு பிரதோஷ விழாவும் வழிபாட்டுக்கு உரியது தான் என்றால் சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோஷ காலம் மிக சக்தி வாய்ந்தது. `ப்ர’ என்றால் விசேஷமானது என்று பொருள். உலகத்தில் உள்ள எல்லா விசேஷமான தோஷங்களையும் போக்கக்கூடிய ஆற்றல் பிரதோஷத்துக்கு உண்டு. அதனால் தான் பிரதோஷ வேளைகளில் சிவனை வழிபடுகிறோம். அப்படி பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபட்டால் நம்மை பிடித்திருக்கும் அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. 

god

அமிர்தத்தைக் கடையும் போது வெளிபட்ட ஆறுகால விஷத்தை  சிவபெருமான்  உண்ட நாள் சனிக்கிழமை என்பதால் சனிக்கிழமைகளில் வருகிற  பிரதோஷம் மகா பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது. அப்படி சனிக்கிழமையில் பிரதோஷம் வருகிற நாளில், பிரதோஷ வேளையில் சிவனை வழிபடுவதோடு சனீஸ்வரனையும் சேர்த்து வழிபட்டால் கூடுதல் பலம் கிடைக்கும். வாழ்க்கையில் ஏற்படும் சகல துன்பங்களும் நீங்கும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம். சனி பிரதோஷத்தில் செய்யப்படுகிற எந்த தானமும் அளவற்ற பலன்களைக் கொடுக்கும்.