சக்கரப் பொங்கலுக்கு வடகறியா? அப்டி ஒரு காம்போ தான் இது… தோசைக்கு ஐஸ்கிரீம்

 

சக்கரப் பொங்கலுக்கு வடகறியா? அப்டி ஒரு காம்போ தான் இது… தோசைக்கு ஐஸ்கிரீம்

பெங்களுருவில் ஒரு வண்டிக்கடைக்காரர் தோசைக்கு ஐஸ்கிரீம் சைடு டிஷ் ஆக கொடுக்கிறார். இதைப் பார்த்த நெட்டிஸின்கள் என்னடா இது புதுசா புதுசா கிளம்புறீங்க? என்றவாறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

பெங்களுருவில் ஒரு வண்டிக்கடைக்காரர் தோசைக்கு ஐஸ்கிரீம் சைடு டிஷ் ஆக கொடுக்கிறார். இதைப் பார்த்த நெட்டிஸின்கள் என்னடா இது புதுசா புதுசா கிளம்புறீங்க? என்றவாறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

ஐஸ்கிரீம் தோசை என்னும் பெயரில் விற்கப்படும் இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள ஐஸ்கிரீம் மற்றும் ஜாம் வைத்து கொடுக்கிறார். இந்த காம்போ அந்த பகுதியில் வைரலாகி வருகிறது.

டெக் ஜாம்பவான் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “நான் ஒன்றும் ஐஸ்கிரீம் தோசைகளின் ரசிகன் அல்ல, ஆனால் இந்த மனிதனின் கண்டுபிடிப்புக்கு முழு மதிப்பெண்கள் வழங்குகிறேன். உண்மையில் விவரிக்க முடியாத இந்திய தெரு விற்பனையாளர்களின் புதுமைக்கு இது ஆதாரமாகும். எங்கள் குழுவில் உள்ள அனைத்து தயாரிப்பு வடிவமைப்பு குழுக்களும் தவறாமல் விற்பனையாளர்களைப் பார்வையிட வேண்டும் மற்றும் அவர்களிடமிருந்து உத்வேகம் பெற வேண்டும்!” என்று பாராட்டி பதிவிட்டிருந்தார்.

 

இந்த கடையின் ஓனர் மஞ்சுநாத் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியோடு  ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் சிரப் ஸ்கூப்ஸுடன் கூடிய தோசையை பரிமாறி வருகிறார் பரிமாறினார்.