சகோதரியாய் இருக்கும்போது சகோதரனால் -மருமகளானபோது மாமனாரால் -உடனிருந்தவர்களால் குதறப்பட்ட பெண் ..

 

சகோதரியாய் இருக்கும்போது சகோதரனால் -மருமகளானபோது மாமனாரால் -உடனிருந்தவர்களால் குதறப்பட்ட பெண் ..

பாபுபூர்வா பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கு இருக்கும் ஐந்து பிள்ளைகளில் மூன்றாவதாக பிறந்த மகனால் ஐந்தாவதாக பிறந்த சகோதரி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது .

உத்தரபிரதேச கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது மகன் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார். செவ்வாய்க்கிழமை பெண் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலை (டி.ஐ.ஜி) அணுகி தனது மகன் மீது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
பாபுபூர்வா பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கு இருக்கும் ஐந்து பிள்ளைகளில் மூன்றாவதாக பிறந்த மகனால் ஐந்தாவதாக பிறந்த சகோதரி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது .
அந்த பெண்ணின் தாய் கொடுத்த புகாரில், பல சந்தர்ப்பங்களில், தனது மகன் தனது மகளின் அறைக்குள் புகுந்து அவளை பலாத்காரம் செய்ய முயன்றான். அவள் எதிர்த்தபோது, அவன் அவளை மோசமான வார்த்தைகளை கூறி மிரட்டினான். ஒருமுறை அவர் அவனது கற்பழிப்பு முயற்சியை எதிர்த்தபோது தனது தாயையும் சகோதரியையும் அடித்து உதைத்து கீழே தள்ளினான் .
அந்த பெண்ணுக்கு திருமணமான உடன், அவர் தனது மாமனாராலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று சிறுமியின் தாயார் கூறினார். 
இந்த வழக்கு பற்றி டி.ஐ.ஜி. அனந்த் தியோ கூறினார்: “நாங்கள் இந்த வழக்கு விசாரணையை வட்ட அலுவலர் ஸ்வேதா யாதவிடம் ஒப்படைத்துள்ளோம். விசாரணைக்கு  பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கண்டறியப்பட்டால், நாங்கள் நடவடிக்கை எடுத்து அவர்களை  சிறைக்கு அனுப்புவோம். “என்றார் .