சகோதரிகளாக நடிக்கும் பிந்துமாதவி, தர்ஷனா பானிக் : த்ரில்லர் பாணியில் உருவாகும் “யாருக்கும் அஞ்சேல்” !

 

சகோதரிகளாக நடிக்கும்  பிந்துமாதவி, தர்ஷனா பானிக் : த்ரில்லர் பாணியில்  உருவாகும்  “யாருக்கும் அஞ்சேல்” !

‘தேர்ட் ஐ என்டர்டெயின்மெண்ட்’  தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது

புரியாத புதிர்,  இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் தற்போது   நடிகை பிந்து மாதவி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இதையடுத்து இப்படத்தின் டைட்டில் லுக்கை சிம்பு, விஜய் சேதுபதி இணைந்து நேற்று வெளியிட்டனர்.

ttn

 

 

படத்திற்கு “யாருக்கும் அஞ்சேல்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் லுக் வெளியான சில நொடியிலேயே அனைவரையும் கவர்ந்து வைரலானது. 

ttn

இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும் போது, ‘ இந்தப்படத்தில் மிக கடினமாக இருந்தது இப்படத்திற்கு தலைப்பு வைக்கும் பணிதான். பல விதமான  தலைப்புகளை அலசி, இறுதியாக “யாருக்கும் அஞ்சேல்” எனும் இத்தலைப்பை தேர்ந்தெடுத்தோம். ரசிகர்கள் முழுப்படத்தினையும் பார்த்து முடிக்கும் போது, இந்த தலைப்பு தான் மிகச்சரியானது என்பதை உணர்வார்கள்.

படத்தின் தலைப்பை அன்பிற்காக நடிகர் சிலம்பரசனும்,  நடிகர் விஜய் சேதுபதியும் வெளியிட்டது எங்களுக்குப் பெரு மகிழ்ச்சி. அவர்கள் வெளியிட்டதால், படத்தின் தலைப்பு பெரிய அளவில் ரசிகர்களை சென்றடைந்துள்ளது என்றார். 

ttn

தொடர்ந்து பேசிய அவர், ‘இப்படத்தின் முழுப்படப்பிடிப்பையும் 30 நாட்களில் ஊட்டியில் முடித்துவிட்டோம். தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வெகு விரைவில் அப்பணிகளும் முடிவடையவுள்ளது.   இரண்டு சகோதரிகள் தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை விற்க தங்களது சொந்த ஊருக்கு பயணமாகிறார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை, அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தை, உளவியல் ரீதியில் அணுகும்  த்ரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது’ என்றார். 

படத்தின்   ஃபர்ஸ்ட் லுக், டிரைலர், இசை வெளியீடு மற்றும் திரை வெளியீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.