கோஷம் போடுவீங்களா… பாஜகவினருக்கு தடியடி கொடுத்த காவல்துறையினர்!!

 

கோஷம் போடுவீங்களா… பாஜகவினருக்கு தடியடி கொடுத்த காவல்துறையினர்!!

வாரணாசியில் பிரியங்கா காந்தியின் பிரச்சாரத்தின் போது, அவருக்கு எதிராக கோஷமிட்ட பாஜகவினரை தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர்.

வாரணாசியில் பிரியங்கா காந்தியின் பிரச்சாரத்தின் போது, அவருக்கு எதிராக கோஷமிட்ட பாஜகவினரை தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி நகர வீதிகளில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து  பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். சாலை மார்க்கமாக பேரணி மேற்கொண்ட அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதற்கு எதிராக பாஜகவினர் சிலர், ப்ரியங்கா காந்தியின் பேரணியில், அவருக்கும் அவரது கட்சிக்கும் எதிராக கோஷங்களை எழுப்பி கலவரத்தில் ஈடுபட்டனர். மேற்குவங்கத்தில் வந்ததுபோன்று கலவரம் வெடித்து விடுமோ என்ற அச்சத்தில் தவித்த காவல்துறையினர் காங்கிரஸ் எதிராக கோஷங்களை எழுப்பிய பாஜகவினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.