கோவை மாணவி கழுத்தறுத்து கொலை: ஒருதலைக்காதலால் உறவினரே கொலை செய்தது அம்பலம்!

 

கோவை மாணவி கழுத்தறுத்து கொலை: ஒருதலைக்காதலால் உறவினரே கொலை செய்தது அம்பலம்!

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினர் சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினர் சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை மாணவி படுகொலை 

polachi

கோவை தனியார் கல்லூரியில்  பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வரும்  மாணவி பிரகதி. திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தைச்  சேர்ந்த இவருக்கும்  காதலர் நாட்டுத்துரைக்கும் இருவீட்டார் சம்மதத்துடன்  சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து பிரகதி கல்லூரி முடிந்து துணிக்கடைக்கு சென்று  வருவதாக கூறிவிட்டு  சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரகதி வீடு  திரும்பாததால் அவரது பெற்றோர் காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் புகாரின் அடிப்படையில் போலீசார் மாணவியை தேட ஆரம்பித்தனர்.  

4 தனிப்படைகள் 

kovai

இதை தொடர்ந்து தாராபுரம் சாலையில்  இளம்பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில்  சாலையோரம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்ததில்  இறந்து கிடந்த பெண் பிரகதி என்பதை உறுதி செய்தனர். பின்னர், உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இந்த  சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 உறவினர் சதீஷ் கைது 
 

murder

இதை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் பிரகதியை மர்ம நபர்கள் இருவர் பின் தொடர்ந்து வந்ததாக தகவல் கூற போலீசார் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் மூலம் பிரகதியின் உறவினர் சதீஷ்  என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஒருதலை காதல் 

pragathi

ஏற்கெனவே திருமணமான சதீஷ், பிரகதியை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும்  அதை பிரகதி ஏற்றமறுத்தாகவும் கூறப்படுகிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிரகதிக்கு அடுத்த மாதம்  திருமணம் நடைபெறவுள்ளதால் ஆத்திரமடைந்த சதீஸ் பிரகதியை கொலை செய்துள்ளார். மேலும்  மாணவியின் உடலில் பல இடங்களில் அதாவது கழுத்து, நெத்தி, வயிறு உள்ளிட்ட இடங்களில் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டிருப்பதும், விரல்கள் துண்டு, துண்டாக வெட்டப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் நிலையில், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வர ஒரு வாரகாலம் ஆகும் என்பதால் அதன் பிறகு தான் கொலை குறித்த முழுவிவரமும் தெரியவரும்.

இதையும் வாசிக்க: வைரலாகும் சிம்பு வீட்டு திருமண அழைப்பிதழ் : சோகத்தில் சிம்பு ரசிகர்கள்!?