கோவை நீதிமன்றத்துக்கு முன் பேனர் வைத்த தி.மு.க! – ஸ்டாலின் மரியாதை காற்றில் பறக்கிறது

 

கோவை நீதிமன்றத்துக்கு முன் பேனர் வைத்த தி.மு.க! – ஸ்டாலின் மரியாதை காற்றில் பறக்கிறது

சென்னையில் சுபஶ்ரீ என்ற பொறியாளர் பேனர் விழுந்து உயிரிழந்தார்.அப்போது தி.மு.க-வினர் யாரும் பேனர் வைக்கக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.அதன் பிறகு தி.மு.க-வில் பேனர் வைப்பது முற்றிலும் நின்றது.

கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாகவே தி.மு.க-வினர் பேனர் வைத்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சுபஶ்ரீ என்ற பொறியாளர் பேனர் விழுந்து உயிரிழந்தார்.அப்போது தி.மு.க-வினர் யாரும் பேனர் வைக்கக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.அதன் பிறகு தி.மு.க-வில் பேனர் வைப்பது முற்றிலும் நின்றது.அங்கொன்றும் இங்கொன்றுமாக எங்காவது தி.மு.க-வினர் பேனர் வைப்பது வைரலானது.

dmk banner1.jpg

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு தி.மு.க-வினர் பேனர் வைத்துள்ளனர்.
அ.தி.முக-வினர் தொடர்ந்து பேனர் வைத்து வருகின்றனர். அவர்களை விமர்சித்துவிட்டு தற்போது தி.மு.க-வினரும் பேனர் வைத்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இவற்றை உடனே அகற்ற வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.