கோவையில் இருவருக்கு கொரோனா! 

 

கோவையில் இருவருக்கு கொரோனா! 

கோவை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சுற்றுலா பயணி உட்பட இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கோவை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சுற்றுலா பயணி உட்பட இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

130க்கு மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்தையடுத்து மக்களின் பீதி இன்னும் அதிகரித்தது. 

கொரோனா வைரஸ்

இந்நிலையில் தைவானிலிருந்து விமானம் மூலம் டெல்லி வந்து, அங்கிருந்து கோவை வழியாக ஈரோட்டிற்கு கடந்த 6 ஆம் தேதி வந்த 46 வயதான சுற்றுலா பயணி, மீண்டும் ஊர் திரும்பும்போது காய்ச்சல் இருப்பது கோவை விமான நிலைய சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், நேற்று கத்தாரில் இருந்து வந்த  26 வயது பெண்ணுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவரின் ரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.