கோவில் பிரகாரத்தை எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும்?!
நாம் ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு செல்லும் போதும் பிரார்த்தனையை முடித்து விட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வருகிறோம். ஆனால், எல்லா ஆலயங்களிலும் எத்தனை முறை வலம் வர வேண்டும் என்று ஏதாவது ஒரு கணக்கு வைத்திருக்கிறோமா? நவகிரகங்களைச் சுற்றி வரும் போது மட்டும் ஒன்பது சுற்றுகள் சுற்றி வருகிறோம். இனி கோயிலில் பிரகாரத்தை எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்!
நாம் ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு செல்லும் போதும் பிரார்த்தனையை முடித்து விட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வருகிறோம். ஆனால், எல்லா ஆலயங்களிலும் எத்தனை முறை வலம் வர வேண்டும் என்று ஏதாவது ஒரு கணக்கு வைத்திருக்கிறோமா? நவகிரகங்களைச் சுற்றி வரும் போது மட்டும் ஒன்பது சுற்றுகள் சுற்றி வருகிறோம். இனி கோயிலில் பிரகாரத்தை எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்!
ஒரு முறை கோவில் பிரகாரத்தை வலம் வந்தால் இறைவனை அணுகுதல் என்று அர்த்தம்.
இரண்டு, நான்கு என்று இரட்டை படை எண்ணிக்கைகளில் பிரகாரத்தைச் சுற்றி வருதல் கூடாது.
மூன்று முறை வலம் வந்தால் மனச்சுமை குறையும்.
ஐந்து முறை வலம் வந்தால் இஷ்ட சித்தி கிடைக்கும்.
ஏழு முறை வலம் வந்தால் காரிய வெற்றி உண்டாகும்.
ஒன்பது முறை வலம் வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும்.
பதினொரு முறை வலம் வந்தால் ஆயுள் விருத்தி உண்டாகும்.
பதிமூன்று முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
பதினைந்து முறை வலம் வந்தால் தன லாபம் உண்டாகும்.
பதினேழு முறை வலம் வந்தால் தானியம் சேரும்.
பத்தொன்பது முறை வலம் வருவதால் பிணிகள் நீங்கும்.
இருபத்தொரு முறை வலம் வருவதால் கல்வி விருத்தியாகும்.
இருபத்தி மூன்று முறை வலம் வந்தால் சுக வாழ்வு கிட்டும்.
நூற்றியெட்டு முறை வலம் வந்தால் புத்திர பேறு கிடைக்கும்.
இருநூற்றுயெட்டு முறைவலம் வந்தால் யாகம் செய்த பலன்கள் உண்டாகும்.