கோவில் திருவிழாவில் சண்டை; கடத்தி கொலை செய்யப்பட்ட இளைஞர்?!

 

கோவில் திருவிழாவில் சண்டை; கடத்தி கொலை செய்யப்பட்ட இளைஞர்?!

கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறின் காரணமாக அனந்து கிரிஷ் (21) எனும் இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

திருவனந்தபுரம்: கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறின் காரணமாக அனந்து கிரிஷ் (21) எனும் இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

திருவனந்தபுரம் கரமனா பகுதியில் உள்ள பைக் ஷோரூம் அருகே அனந்து கிரிஷ் என்பவரின் உடல் கிடைத்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு கிரிஷை இருவர் காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாலு, ரோஷன் என்ற இரு இளைஞர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொஞ்சிரவிலா கோவில் திருவிழாவில் அனந்து தரப்புக்கும் மற்றொரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அனந்து மொபைலில் இருந்து அவன் நண்பனுக்கு அழைப்பு வந்த பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சில மணி நேரத்தில் அனந்துவின் மொபைல் ஸ்விட்ச் ஆப் ஆகியிருக்கிறது. டிசி பத்திரிகை அளித்துள்ள தகவலின்படி, போதை பழக்கம் உள்ளவர்கள் அதிகமாய் பயன்படுத்தும் இடத்தின் அருகே அனந்துவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவன் கை நரம்புகள் அறுக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து திருவனந்தபுரம் போலீஸ் கமிஷ்னர் சஞ்சய் குமார் கருட், காவல்துறையினர் தரப்பு இந்த வழக்கில் விரைவாக விசாரணை செய்து வருகின்றனர். போதை பழக்கத்தின் ஆதிக்கத்தால் அனந்துவை கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.