கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியது!

 

கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியது!

இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

 சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

 

இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.  

இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 13 லட்சத்து 41ஆயிரத்து 907  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 74,565 பேர் பலியாகி  உள்ளனர் .  மேலும் 
2லட்சத்து 76 ஆயிரத்து 259  பேர் குணமாகியுள்ளனர்.