கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொளுந்துவிட்டு எரிந்த அம்னி பேருந்துகள்! 

 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொளுந்துவிட்டு எரிந்த அம்னி பேருந்துகள்! 

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 2 ஆம்னி பேருந்துகளில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 2 ஆம்னி பேருந்துகளில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த தனியார் பேருந்து திடீர் என்று தீ பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி அருகில் நின்றுக்கொண்டிருந்த இரு பேருந்துகளும் தீப்பிடித்து எரிந்தன. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  தகவலறிந்து நிகழ்விடத்திற்கு கோயம்பேடு மற்றும் கீழ்ப்பாக்கம் அகிய பகுதியில் இருந்து வந்த  மூன்று தீயணைப்பு வாகனங்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். விபத்துக்கான குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.