கோயம்பேடு சந்தையில் 38 பேருக்கு கொரோனா தொற்று!

 

கோயம்பேடு சந்தையில் 38 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2300ஐ கடந்துள்ள நிலையில், 1000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான சென்னையில், 900க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியான கோயம்பேடு சந்தையிலும் கொரோனா பரவியது சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கோயம்பேடு சந்தையில் 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்றும் இன்றும் பூ வியாபாரிகள், பழக்கடை மற்றும் காய்கறி விற்பனை செய்தவர்கள், கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த கூலி தொழிலாளி உள்ளிட்ட ஏராளமானோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ttn

இந்த சூழலில் கோயம்பேடு சந்தையில் மொத்தம் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 38 பேர் கோயம்பேடு சந்தையை சேர்ந்தவர்கள். மொத்தமால சென்னையில் 906 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.