கோமதி மாரிமுத்துக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எவ்வளவு நன்கொடை கொடுத்தார் தெரியுமா?

 

கோமதி மாரிமுத்துக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எவ்வளவு நன்கொடை கொடுத்தார் தெரியுமா?

சர்வதேச ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளார்.

சென்னை: சர்வதேச ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளார்.

3-வது சர்வதேச ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இதில் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து, தங்கம் வென்று நாட்டிற்கு சிறப்பை தேடி தந்துள்ளார். சுமார் 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் கடந்து சாதனை படைத்துள்ளார். 

gomathi marimuthu

கோமதியின் வெற்றியைத் தமிழகமே கொண்டாடி வருகிறது. இவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பிரபலங்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

gomathi marimuthu

இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது மன்ற நிர்வாகிகள் மூலம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார். சமீபத்தில் துவங்கப்பட்ட ‘லாபம்’ படப்பிடிப்பில் வெளியூரில் இருப்பதால் விஜய் சேதுபதியால் நேரில் வர முடியவில்லை’ என்ற அவரது நிர்வாகிகள் தெரிவித்தனர். அதே சமயம் செல்போனில் அழைத்து விஜய் சேதுபதி கோமதிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

gomathi

முன்னதாக நடிகர் ரோபோ ஷங்கர்,திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் காசோலைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.