கோபத்தில் முகன் செய்த அதிரடி செயல்! கதறி அழுத அபிராமி 

 

கோபத்தில் முகன் செய்த அதிரடி செயல்! கதறி அழுத அபிராமி 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை:  பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய எபிசோடில் ரேஷ்மா வெளியேறினார். அதைத்தொடர்ந்து இன்றைக்கான முதல் புரோமோவில் சாக்ஷி வழக்கம் போல் தனது நாரதர் வேலை பார்த்துள்ளார். அதாவது இந்த முறை அபிராமி மற்றும் முகன் இடையே தேவையில்லாமல் சண்டை முடியுள்ளார். 

இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் அபிராமி அழுது கொண்டு இருக்கும் சமயத்தில் தர்ஷன் சென்று ஆறுதல் செய்ய முற்பட்டுள்ளார். பிறகு அங்கு வந்த முகனிடம், அபிராமி, ‘எனக்கு அங்க உட்கார பிடிக்கவில்லை, அதனால் அந்த இடத்தை விட்டு நான் நகர்ந்து வந்துவிட்டேன். அவங்களுக்கும், எனக்கும் இடையே இருக்கும் ப்ரண்ட்ஷிப்பில் நிறைய இடைவேளை வந்தது. இதை அவங்க அப்படிச் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்ல’ என்றார். 

உடனே முகன், ‘எப்படி எந்திரிச்சி வந்த? என்று கோபமாக கேட்டுக்கொண்டே அமர்ந்திருந்தக் கட்டிலை  இரண்டே பஞ்சில் அடித்து உடைத்துவிட்டார்’. இதை பார்த்த ரசிகர்கள் சிலர் முகனுக்கு அறிவுரை கூற ஆரம்பித்துள்ளனர்.