கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் அறிவிப்பு!

 

கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் அறிவிப்பு!

இலங்கையில் நடைப்பெற்ற அதிபருக்கான தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் மோடி, கோத்தபய ராஜபக்சேவை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கோத்தபய ராஜபக்சே இந்தியா வருவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் நடைப்பெற்ற அதிபருக்கான தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் மோடி, கோத்தபய ராஜபக்சேவை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கோத்தபய ராஜபக்சே இந்தியா வருவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.

rajapaksa

இந்நிலையில், கோத்தபய ராஜபக்சேவுக்கு விடுத்துள்ள அழைப்பை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் 23-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பேரினவாத வெறியின் அடிப்படையில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். போர்க்குற்றவாளி கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று அவர் 29-ந் தேதி டெல்லி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய அரசு தனது அழைப்பை திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். 2009-ம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முதன்மையான காரணம் அன்றைய ராணுவ ஆலோசகராக இருந்த கோத்தபய ராஜபக்சே தான். பல்லாயிரக்கணக்கான தமிழர்களை

thirumavalavan

இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என அவர் மக்களால் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பதால் ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணை நடக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் அவசர அவசரமாக இந்திய அரசு கோத்தபயவுக்கு இந்தியா வர அழைப்பு விடுத்துள்ளது. இது ஈழத்தமிழர்களை மட்டுமன்றி இந்திய தமிழர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு கோத்தபய ராஜபக்சேவுக்கு விடுத்துள்ள அழைப்பை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி, சென்னையில் 23-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறியிருக்கிறார்.