கோத்தபயே வெற்றி… நடிகை கஸ்தூரி விமர்சனத்தைப் பார்தீங்களா?

 

கோத்தபயே  வெற்றி… நடிகை கஸ்தூரி விமர்சனத்தைப்  பார்தீங்களா?

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபயா பற்றி நடிகை கஸ்தூரி ட்விட்டரில் வௌியிட்டுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த வாரம் நடந்தது. வாக்குகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டது. தமிழர் பகுதியில் சஜித் பிரேமதாசா அதிக வாக்குகளைப் பெற்றார்.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபயா பற்றி நடிகை கஸ்தூரி ட்விட்டரில் வௌியிட்டுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த வாரம் நடந்தது. வாக்குகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டது. தமிழர் பகுதியில் சஜித் பிரேமதாசா அதிக வாக்குகளைப் பெற்றார். சில மாவட்டங்களில் 90 சதவிகித வாக்குகள் அவருக்கு கிடைத்தது. ஆனால், சிங்களர் பெரும்பான்மையாக உள்ள பகுதியில் கோத்தபய ராஜபக்சேவுக்கு வாக்குகள் விழுந்தன. இதனால், மிகப்பெரிய வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

gotabhaya rajapaksa

புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபயவுக்கு இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இருப்பினும் தமிழர்கள் மத்தியில் புதிய அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழக தலைவர்கள் பலரும் கோத்தபய தேர்வு செய்யப்பட்டதால் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நல்லது நடக்க வாய்ப்பில்லை என்ற வகையில் பேசி வருகின்றனர். 

அரசியல் தலைவர்களுக்கு இணையாக நடிகை கஸ்தூரியும் ட்விட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், கோத்தபய என்பதை “கோத்தா பய்யா” என்று கெட்ட வார்த்தைப் போல குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுவும் கடந்து போம். தமிழ் வாழ்க, தமிழினம் ஓங்குக என்று குறிப்பிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவை பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர். பலரும் அவருக்கு ஆதரவாக கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.