கோட்சே தேசாபிமானியாம்! அப்போ காந்தி ஆன்ட்டிநேஷனல், அதானேடா?

 

கோட்சே தேசாபிமானியாம்! அப்போ காந்தி ஆன்ட்டிநேஷனல், அதானேடா?

தீபாராதனை காட்டுபவர்கள்கூட‌ தீவிரவாதியாக இருப்பது பாஜகவில் மட்டும் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் வகையில், அக்கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், அபிமானிகள், தொண்டர்கள் என ஒவ்வொரு அடுக்கில் இருப்பவர்களும் வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர்.

தீபாராதனை காட்டுபவர்கள்கூட‌ தீவிரவாதியாக இருப்பது பாஜகவில் மட்டும் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் வகையில், அக்கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், அபிமானிகள், தொண்டர்கள் என ஒவ்வொரு அடுக்கில் இருப்பவர்களும் வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். எழுந்து நடமாட முடியாமல் தள்ளாத வயதில் இருக்கும் நம்ம ஊர்  ஜீயர்கூட, கமல் நடமாட முடியாது என்று மிரட்டுகிறார். போகட்டும்

pragya

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறைமீண்ட பெண் சாமியார் பிரக்யா தாகூர், மத்திய பிரதேசம் போபாலில் வேட்பாளராக களம் இறங்குகிறார். ஒரு சாயலில் ‘ஆறு’ பட சவுண்டு சரோஜா போல இருக்கும் அவரிடம் கமலின் கோட்சே குறித்த கருத்து குறித்து கேள்வி எழுப்புகிறார்கள் பத்ரிகையாளர்கள். அதற்கு பிரக்யாவின் பதில் “நாதுராம் கோட்சே சிறந்த தேசாபிமானி” என்பதாகும். சரிதான்.

kamal

காதலா காதலா கமல் பாஷையில் சொல்வதானால், கோட்சே தேசாபிமானியாகிவிட்டதால, குண்டு வச்ச பிரக்யா தாகூர் தேசாபிமானியாகிவிட்டதால், குண்டடிபட்ட செத்த காந்தி தேச விரோதியாகிட்டாருப்பா