கோடீஸ்வரியான கௌசல்யா…தமிழக முதல்வர், கமல் ஹாசன் நேரில் வாழ்த்து!
1 கோடி பரிசை வென்றுள்ளார். இதனால் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நடிகை ராதிகா சரத்குமார் முதன் முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோடீஸ்வரி நிகழ்ச்சியின் மூலம் டிவி தொகுப்பாளராகியுள்ளார்.
முற்றிலும் பெண்களுக்கான இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த கௌசல்யா என்ற வாய் பேசமுடியாத காது கேட்க முடியாத பெண் ஒருவர் பங்கேற்றுள்ளார்.
உடல் குறைகளை தாண்டி மனத்திடத்துடனும் நம்பிக்கையுடனும் விளையாடிய அப்பெண், 15 கேள்விகளுக்கும் சரியான பதிலளித்து கோடீஸ்வரியில் 1 கோடி பரிசை வென்றுள்ளார். இதனால் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் கௌசல்யாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து தனது பாராட்டுகளையும் வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனும் நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது நடிகை ராதிகா உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.