கொழுப்பு, சர்க்கரை நோயைத் தடுக்கும் சமஸ்கிருதம்! – பா.ஜ.க எம்.பி சொல்கிறார்

 

கொழுப்பு, சர்க்கரை நோயைத் தடுக்கும் சமஸ்கிருதம்! – பா.ஜ.க எம்.பி சொல்கிறார்

தினமும் சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய், கொலஸ்டிரால் தொடர்பான பிரச்னைகள் வரவே வராது என்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமஸ்கிருத பல்கலைக் கழகம் ஏற்படுத்துவது தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விவாதத்தின்போது பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பேசினர். ஆங்கிலத்தில் வறுத்தெடுக்கும் ஆ.ராசா கூட இந்த விவாதத்தில் பங்கேற்று தமிழில் பேசினார்.

தினமும் சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய், கொலஸ்டிரால் தொடர்பான பிரச்னைகள் வரவே வராது என்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமஸ்கிருத பல்கலைக் கழகம் ஏற்படுத்துவது தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விவாதத்தின்போது பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பேசினர். ஆங்கிலத்தில் வறுத்தெடுக்கும் ஆ.ராசா கூட இந்த விவாதத்தில் பங்கேற்று தமிழில் பேசினார்.
இந்த விவாதத்தில் பா.ஜ.க எம்.பி கணேஷ் சிங் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ganesh singh

“உலகின் 97 சதவிகித மொழிகள், சில இஸ்லாமிய மொழிகளுக்கும் கூட அடிப்படை சமஸ்கிருதம்தான். தினமும் சமஸ்கிருதம் பேசுபவர்களுக்கு சர்க்கரை நோய், கொழுப்பு படிவது தொடர்பான பிரச்னை ஏற்படாது என்று அமெரிக்கக் கல்வி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சமஸ்கிருதம் பேசும்போது அது நம்முடைய நரம்பு மண்டலத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி, நோயின்றி வாழத் துணை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் ப்ரோகிராம் மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டுவந்தால் அது சிறப்பானதாக இருக்கும் என்று நாசா கூறியுள்ளது” என்று அடுக்கடுக்காக குண்டுகளை வீசினார்.
மத்திய இணை அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி பேசும்போது, “சமஸ்கிருதம் மிகவும் நெளிவு சுழிவுகள் நிறைந்த மொழி. ஒரே வாக்கியத்தை பல வழிகளில் பேச முடியும். பிரதர், கவ் (பசு) உள்ளிட்ட பல ஆங்கில வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டவையே. இதுபோன்ற தொன்மையான மொழியை ஊக்குவிப்பது மற்ற மொழிகளை பாதிக்காது” என்றார்.
அமைச்சர் மற்றும் பாரதிய ஜனதா எம்.பி-யின் பேச்சு தற்போது நாடு முழுக்க சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.