கொள்ளையர்களுக்கு பயந்து வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட 112 சவரன் நகை திருட்டு !

 

கொள்ளையர்களுக்கு பயந்து வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட 112 சவரன் நகை திருட்டு !

அப்பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடப்பதால் கொள்ளையர்களுக்கு பயந்து இவர் தனது மனைவி மற்றும் மகளின் 112 சவரன் நகையைத் தனது அறையிலேயே குழி தோண்டி புதைத்து வைத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியவாடி பகுதியைச் சேர்ந்த முதியவர் ராஜபாளையன். அப்பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடப்பதால் கொள்ளையர்களுக்கு பயந்து இவர் தனது மனைவி மற்றும் மகளின் 112 சவரன் நகையைத் தனது அறையிலேயே குழி தோண்டி புதைத்து வைத்துள்ளார். இதனைக் கொள்ளையர்கள் நோட்டமிட்டு வந்துள்ளனர்.

ttn

நேற்று இவர் தனது குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார். அந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் அவரின் வீட்டுப் பூட்டை உடைத்து, அந்த முதியவரின் அறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 112 சவரன் நகையையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

ttn

நேற்று மாலை வீடு திரும்பிய முதியவர்  வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும் நகை திருட்டுப் போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அந்த முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருடர்களைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.