கொலை செய்து விட்டு பதற்றமில்லாமல் பால்கனியில் கஞ்சா அடித்த இளைஞன்!
மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற காரணத்தால் 1998 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடு வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்கப்பட்டவர் ஜோர்டான். இவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் வீட்டில் பேராசிரியர் ஜாவேத் பூட்டோ வசித்து வந்தார். பாகிஸ்தானை விட்டு அமெரிக்காவுக்கு குடிப்பெயர்ந்த பூட்டோ வாஷிங்டனில் மனநல காப்பாகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற காரணத்தால் 1998 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடு வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்கப்பட்டவர் ஜோர்டான். இவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் வீட்டில் பேராசிரியர் ஜாவேத் பூட்டோ வசித்து வந்தார். பாகிஸ்தானை விட்டு அமெரிக்காவுக்கு குடிப்பெயர்ந்த பூட்டோ வாஷிங்டனில் மனநல காப்பாகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இரவுப்பணி முடிந்து பார்க்கிங்கில் காரை விட்டுவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பூட்டோவை பின்தொடர்ந்து சென்று தாக்கி, துப்பாக்கியால் சுட்டு ஜோர்டான் கொலை செய்தார். இச்சம்பவம் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அண்டைவீட்டுக்காரர்கள் என்ற போதும் அதிகம் அறிமுகம் இல்லாத பூட்டோவை ஜோர்டான் கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஜோர்டானின் வீட்டு பால்கனியில் இருந்து கஞ்சா துர்நாற்றம் தனது வீட்டுக்கு வருகின்றது என்று வீட்டின் உரிமையாளரிடம் கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு பூட்டோ புகார் அளித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜோர்டான் கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலை செய்து விட்டு தனது வீட்டு பால்கனியில் ஒரு ஓரமாக எந்த விதமான பதற்றமும் இன்றி ஜோர்டான் அமர்ந்திருந்ததாகவும் அவரது காலில் சிறிய அளவு ரத்த கறை இருந்ததாகவும் அருகே கஞ்சா பொட்டலங்கள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.