கொரோனா வைரஸ்: மலேசியாவில் மார்ச் 31 வரை நடமாட்ட கட்டுப்பாடு, வர்த்தக நிறுவனங்கள் மூடல்

 

கொரோனா வைரஸ்: மலேசியாவில் மார்ச் 31 வரை நடமாட்ட கட்டுப்பாடு, வர்த்தக நிறுவனங்கள் மூடல்

கொரோனா வைரஸ் பீதி காரணமாக மார்ச் 31 வரை மலேசியாவில் நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர்: கொரோனா வைரஸ் பீதி காரணமாக மார்ச் 31 வரை மலேசியாவில் நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ttn

இந்த நிலையில், மலேசியாவில் நாளை (மார்ச் 18) முதல் இம்மாதம் 31-ஆம் தேதி வரை நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அரசாங்க, தனியார் வளாகங்கள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. சமயம், சமூகம், கலாசாரம் தொடர்பான நிகழ்வுகள் உள்ளிட்ட கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களும் வர்த்தகங்களும் மூடப்படும். பேரங்காடிகள், சந்தைகள், சிறிய சந்தைகள், பல்பொருள் அங்காடிக் கடைகள் இயங்கும். வெளிநாடுகளுக்குச் செல்ல மலேசியர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ttn

வெளிநாடுகளிலிருந்து மலேசியாவுக்குத் திரும்புவோர், சுகாதாரப் பரிசோதனைக்குட்படுவதுடன் அவர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வெளிநாட்டினர் மலேசியாவுக்கு வருவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்படும். நீர், மின்சாரம், ஆற்றல், தொலைத்தொடர்பு, அஞ்சல் சேவைகள், போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஒலிபரப்பு, நிதி, வங்கி, சுகாதாரம், மருத்துவம், தீயணைப்பு, சிறைகள், துறைமுகம், பாதுகாப்பு, தற்காப்பு, துப்புரவு, உணவு வழங்கல் உட்பட இன்றியமையாச் சேவைகள் தவிர மற்ற அரசாங்க, தனியார் வளாகங்கள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.