கொரோனா வைரஸ் பீதி! 14 நாட்கள் மரங்களில் தங்கி தங்களை தனிமைப்படுத்தும் மேற்கு வங்க கிராமவாசிகள்…..

 

கொரோனா வைரஸ் பீதி! 14 நாட்கள் மரங்களில் தங்கி தங்களை தனிமைப்படுத்தும் மேற்கு வங்க கிராமவாசிகள்…..

கொரோனா வைரஸ் பீதியால் மேற்கு வங்கத்தில் ஒரு கிராமத்தினர் தாங்களாகவே 14 நாட்கள் மரங்களில் தங்கி தங்களை தனிமைப்படுத்துகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னையில் வேலை பார்த்த மேற்கு வங்கம் புருலியா மாவட்டத்தை சேர்ந்த வான்ஜிடி கிராமவாசிகள் தங்களது சொந்த மாவட்டத்துக்கு திரும்பினர். விஞ்ஞானிகளின் விதிமுறையின்படி, கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய ஒருவர் குறைந்தபட்சம் 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மரங்களில் தங்கியிருக்கும் கிராமவாசிகள்

துரதிருஷ்டவசமாக வான்ஜிடி கிராமத்தில் வசிப்பவர்களின் வீடுகளில் தனி அறைகள் கிடையாது. அப்புறம் எப்படி அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள முடியும். பார்த்தார்கள் நேரராக அந்த பகுதிகளில் உள்ள பெரிய மரங்களுக்கு சென்றார்கள். மரத்தில் 14 நாட்கள் தங்குவதற்காக முகாம்களை அமைத்தனர். தற்போது அதில் தங்கி தங்களை தனிமைப்படுத்தி வசித்து வருகிறார்கள். 

மரங்களில் தங்கியிருக்கும் கிராமவாசிகள்

முன்பு இந்த மரங்கள் ஊருக்கு யானைகள் வருகிறதா என்பதை கண்காணிக்க பயன்பட்டது. தற்போது கிராமவாசிகள் தங்களை தனிமைப்படுத்த அந்த மரங்களை பயன்படுத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் நேற்றுவரை மொத்தம் 15 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டுள்ளனர். மேலும் ஒருவர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளார். உலகம் முழுவதுமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டி விட்டது.