கொரோனா வைரஸ் பீதி… விமானத்தில் தனி ஆளாகவந்த சென்னை மாணவி!

 

கொரோனா வைரஸ் பீதி… விமானத்தில் தனி ஆளாகவந்த சென்னை மாணவி!

பிரபலங்கள் தனி விமானத்தில் பறந்தார்கள் என்று கேட்டிருக்கிறோம். ஆனால், விமானத்தில் தனி நபராக வந்தவரைப் பற்றித் தெரியுமா? கொரோனா வைரஸ் பீதி காரணமாக சீனாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு விமானத்தில் தனி ஆளாக வந்து சேர்ந்திருக்கிறார் மருத்துவ மாணவி வேலம். சீனாவின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள டியாஞ்சின் நகரத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக அவர் சென்னை வந்து சேர்ந்தார். தனியாக அமர்ந்து வரும் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பிரபலங்கள் தனி விமானத்தில் பறந்தார்கள் என்று கேட்டிருக்கிறோம். ஆனால், விமானத்தில் தனி நபராக வந்தவரைப் பற்றித் தெரியுமா? கொரோனா வைரஸ் பீதி காரணமாக சீனாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு விமானத்தில் தனி ஆளாக வந்து சேர்ந்திருக்கிறார் மருத்துவ மாணவி வேலம்சென்னைவின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள டியாஞ்சின் நகரத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக அவர் சென்னை வந்து சேர்ந்தார். தனியாக அமர்ந்து வரும் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

chennai

இது பற்றி அவரது பெற்றோர் கூறுகையில், “வேலம் சீனாவில் மருத்துவம் இறுதியாண்டு படித்து வருகிறார். அங்கு இருந்து மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். ஆனால், நாங்கள்தான் கட்டாயம் தமிழகம் திரும்பி வர வேண்டும் என்று வற்புறுத்தினோம். பல விமான நிறுவனங்க் சீனாவுக்கான விமான சேவையை ரத்து செய்துவிட்டன. திரும்பி வர வழியில்லாமல் இருந்தார். கடைசியில் ஒரே ஒரு விமான நிறுவனத்தில் டிக்கெட் கிடைத்தது. விமானத்தில் ஏறிய பிறகுதான் அவர் மட்டுமே அந்த விமானத்தில் பயணம் செய்தது தெரியவந்தது.

corana

தனியாளாக டியாஞ்சின் நகரத்திலிருந்து சிங்கப்பூர் வந்துள்ளார். அங்கிருந்து சென்னை வந்தார். பல்வேறு மருத்துவ பரிசோதனைக்குப் பிறகே அவரை வீட்டுக்கு செல்ல அனுமதித்தனர்” என்றனர்.
சீனாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறப்பு விமான சேவையும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.