கொரோனா வைரஸ் பீதி; மாஸ்க் விலை திடீர் உயர்வு!

 

கொரோனா வைரஸ் பீதி; மாஸ்க் விலை திடீர் உயர்வு!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் மாஸ்க் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதனால் மாஸ்க்களின் விலை உயர்ந்துள்ளது.  மறுபயன்பாடு செய்து கொள்ள ஏதுவான N95 மாஸ்க்  130 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது 270 ரூபாய்

தமிழகத்தில் மாஸ்க்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் மாஸ்க் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதனால் மாஸ்க்களின் விலை உயர்ந்துள்ளது.  மறுபயன்பாடு செய்து கொள்ள ஏதுவான N95 மாஸ்க்  130 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது 270 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

coronavirus-09

ஓரடுக்கு மாஸ்க் வழக்கமாக 4 ரூபாய்க்கு விற்கப்படும். ஆனால் தற்போது 17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 6 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மூன்றடுக்கு மாஸ்க், 25 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடந்த 1 ஆம் தேதி முதல் மாஸ்க், மருத்துவப் பாதுகாப்பு உடைகள்,  கையுறை  உள்ளிட்ட பலவற்றை ஏற்றுமதி செய்யக்கூடாதென மத்திய அரசு தடை விதித்திருந்தபோதிலும், செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனினும் அரசு மருத்துமனைகளைப் பொறுத்தவரை மாஸ்க்கள் கிடைப்பதில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்றே சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.