கொரோனா வைரஸ் பாதிப்பு: ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்கிய சிவகார்த்திகேயேன்!

 

கொரோனா வைரஸ் பாதிப்பு: ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்கிய சிவகார்த்திகேயேன்!

உலக நாடுகளை நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்தியா முழுக்கவே மக்கள் வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். மேலும், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

சிவகார்த்திகேயன்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்கலாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து பலரும் நிதியுதவி வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.