கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி : சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 31ஆம் தேதியோடு நிறைவு!

 

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி : சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 31ஆம் தேதியோடு நிறைவு!

11 ஆம் தேதி முதல் தமிழக துறைகளின் மானிய கோரிக்கைகளுக்கான சட்டபேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது.

கடந்த மாதம் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்ற பின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வை மார்ச்8 முதல் ஏப்ரல் 9 வரை நடத்தச் சபாநாயகர் தனபால் தலைமையிலான அலுவல் கூட்டம் முடிவு செய்தது. அதன் படி கடந்த 8 ஆம் தேதி கூடிய சட்டப்பேரவையில் திமுக பொதுச் செயலாளர்  க.அன்பழகன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட பின்னர் கூட்டம் மார்ச் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கபட்டது.

ttn

அதனையடுத்து 11 ஆம் தேதி முதல் தமிழக துறைகளின் மானிய கோரிக்கைகளுக்கான சட்டபேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை  நடைபெறவிருந்த சட்டபேரவை கூட்டத்தொடர்  வரும் 31 ஆம் தேதியோடு நிறைவடைவதாக  சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். மேலும், இனி வரும் நாட்களில் காலை, மாலை என இரண்டு வேலைகளிலும் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் 31 ஆம் தேதிக்குள் மானிய கோரிக்கைகளை முடிக்க வேண்டும் என்பதால் ஒரே நாளில் 6 துறைகளுக்கான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.