கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது….நேற்று மட்டும் புதிதாக 867 பேருக்கு கொரோனா உறுதி…
நம் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி விட்டது. மேலும் நேற்று மட்டும் 867 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுவரை கொரோனாவல் 12,282 பேர் பாதிக்கபட்டுள்ளனர். நேற்று மட்டும புதிதாக 867 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
மாநிலங்கள் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்
மகாராஷ்டிரா 2,916
டெல்லி 1,578
தமிழ்நாடு 1,242
ராஜஸ்தான் 1,076
மத்திய பிரதேசம் 0 938
இதர இந்தியா 4,532
மொத்தம் 12,283
மாநிலங்கள் கொரோனா பாதித்தவர்கள் (நேற்று மட்டும்)
மகாராஷ்டிரா 232
மத்திய பிரசேதம் 197
ராஜஸ்தான் 071
தமிழ்நாடு 038
டெல்லி 017
இதர இந்தியா 312
மொத்தம் 867