கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 3,042 ஆக உயர்வு!

 

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை  3,042 ஆக உயர்வு!

உலக நாடுகளை அச்சுறுத்தும்  கொரோனா வைரஸ் தாக்குதலால்  ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தும்  கொரோனா வைரஸ் தாக்குதலால்  ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதிக்கச் செல்லும் மருத்துவர்களுக்கும் பரவுவதால் சீன அரசு மக்களைப் பாதுகாக்க முடியாமல் தவித்து வருகிறது. சீனா மட்டுமின்றி தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான், லண்டன் உள்ளிட்ட 50 நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதன் காரணமாகச் சீனாவிலிருந்து வரும் நபர்கள், திருப்பி சீனாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

இந்த வைரஸ் தாக்குதல் கட்டுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்தாலும், பலி எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சீனாவில்,  கொரோனா வைரஸ் பாதிப்பால்  பலியானவர்களின் எண்ணிக்கை 3,042 ஆக உயர்ந்துள்ளது.