கொரோனா வைரஸ் தாக்கம்.. 144 தடை உத்தரவு!

 

கொரோனா வைரஸ் தாக்கம்.. 144 தடை உத்தரவு!

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. கேரளா, தமிழகம்,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வைரஸ் பரவியுள்ளது. இதனால் அனைத்து மாநில அரசும் மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். கொரோனா பரவிய எல்லா மாநிலங்களிலும் பள்ளி, வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 

ttn

அதே போலக் கர்நாடகா மாநிலத்திலும் நிகழ்ச்சிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ள நிலையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில்,  மைசூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.