கொரோனா வைரஸ்: தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது – வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவிப்பு

 

கொரோனா வைரஸ்: தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது – வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவிப்பு

தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

ttn

மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருவதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகள் மற்றும் மால்களை முன்னெச்சரிக்கையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.