கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய மூன்று பேர் கைது!

 

கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய மூன்று பேர் கைது!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் உயிரிழப்பு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் உயிரிழப்பு 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 193 பேர் பாதிக்க பட்டுள்ளனர். இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே மக்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் பற்றி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தும் கைது தொடர்கிறது. 

ttn

இந்நிலையில்  ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த 3 பேர் வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். வாட்ஸ் மூலம் அப்பகுதியில் கொரோனா அச்சத்தை அதிகப்படுத்தும் விதமாகத் தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார் வாசுதேவன், கமலேஷ் மற்றும் வரதராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும், வதந்தி பரப்பினால் கைது நடவடிக்கை தொடரும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.