கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் ஒரேநாளில் 29 பேர் பலி – பலி எண்ணிக்கை 582ஆக அதிகரிப்பு

 

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் ஒரேநாளில் 29 பேர் பலி – பலி எண்ணிக்கை 582ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக 582 பேர் உயிரிழந்துள்ளனர்.

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக 582 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார அவசர நிலைஎன்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ttn

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 582-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் கொரோனா வைரஸால் புதிதாக 29 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அந்நாடு 6-வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 295-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.