கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 வரை ஒத்தி வைப்பு
கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மும்பை: கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் 29-ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தலைகாட்ட தொடங்கியிருப்பதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்படக் கூடும் என்று கூறப்பட்டது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
?Announcement?: #VIVOIPL suspended till 15th April 2020 as a precautionary measure against the ongoing Novel Corona Virus (COVID-19) situation.
More details ➡️ https://t.co/hR0R2HTgGg pic.twitter.com/azpqMPYtoL
— IndianPremierLeague (@IPL) March 13, 2020
இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் போட்டி அட்டவணை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டிகளை ஒத்தி வைக்கும்படி விளையாட்டுத் துறை அமைச்சகம் பிசிசிஐ-க்கு அறிவுறுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.