கொரோனா வைரஸை விட மோசமானவர் மு.க.ஸ்டாலின்! – பிரேமலதா பேச்சு

 

கொரோனா வைரஸை விட மோசமானவர் மு.க.ஸ்டாலின்! – பிரேமலதா பேச்சு

மதுரையில் தே.மு.தி.க சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றுப் பேசினார். அப்போது, “தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் தமிழக முதல்வர் ஆவார்.

கொரோனா வைரஸை விட மோசமானவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் என்று தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரையில் தே.மு.தி.க சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது, “தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் தமிழக முதல்வர் ஆவார்.

stalin-dmk-09

எனவே, தொண்டர்கள் இப்போதே விழிப்புடன் பணியாற்ற வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் சில கட்சிகள் நம்மை சாதி, மதத்தால் பிரிக்க முயல்கின்றது. தமிழகத்தை வன்முறை பூமியாக மாற்ற நினைக்கிறது. இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதல் கட்சியாக களத்தில் நிற்பது தே.மு.தி.க-தான். 
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் கிருமியைவிட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மோசமானவர்” என்றார்.