கொரோனா வைரஸால் மேலும் ஓர் பலி.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

 

கொரோனா வைரஸால் மேலும் ஓர் பலி.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை14 லட்சத்தை கடந்துள்ளது. 82,074 பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உலக நாடுகள் திணறி வருகின்றன. தமிழகத்தில் நேற்று காலை 621 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நேற்று இரவு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்தது. குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக்கிறது. 

ttn

இந்த கொரோனா வைரஸால் ஏற்கனவே தமிழகத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், வேலூர் சி.எம்.சி.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்துள்ளார். வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டையை சேர்ந்த 45 வயதுடைய இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தனிப்பிரிவில் வைத்து  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.