கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் நலமாக இருக்கிறார் : அமைச்சர் விஜய பாஸ்கர்

 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் நலமாக இருக்கிறார் : அமைச்சர் விஜய பாஸ்கர்

குறிப்பாக ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வருகிறது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 50க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், ஓமனில் இருந்து தமிழகத்துக்குக் காஞ்சிபுரம் பொறியாளருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப் பட்டிருப்பதால், அவர் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருடன் பழகிய மற்ற 8 பேருக்கு கொரோனா இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

இந்நிலையில் இன்று சென்னை கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நபர் மருத்துவர்களின் முயற்சியால் நலமாக இருக்கிறார் என்றும் கொரோனா வைரஸ் தொடர்பாக மொத்தம் 1,132 பேர் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.