கொரோனா வைரஸால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு? – கசிந்த புதிய தகவல்

 

கொரோனா வைரஸால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு? – கசிந்த புதிய தகவல்

2020-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் போட்டியை கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்படுவது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை: 2020-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் போட்டியை கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்படுவது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் 29-ஆம் தேதி தொடங்கி மே 24-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஐபிஎல் தொடரில் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 2 போட்டிகள் நடைபெறும். மேலும் லீக்  போட்டிகள்  44 நாட்களுக்கு பதிலாக 50 நாட்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான லீக் போட்டிகள் இரவு 8 மணிக்கு தொடங்கும். இரண்டு போட்டிகள்  நடக்கும் நாட்களில் மாலை 4 மணிக்கு முதல் போட்டி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ttn

இந்த நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக தலைகாட்ட தொடங்கியிருப்பதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்படக் கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் அதுபோன்ற ஒரு முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில், “ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும்போது வைரஸ் பரவுவதற்கான ஆபத்து எப்போதும் உள்ளது. எனவே இதுபோன்ற காலகட்டங்களில் மக்கள் ஒன்றாக கூடக் கூடிய எந்த விஷயத்தையும் ஒத்தி வைப்பது நல்லது” என்றார்.