கொரோனா வைரஸால் உ.பி.யில் இருவர் உயிரிழப்பு! மொத்த உயிரிழப்பு 45 ஆனது!!

 

கொரோனா வைரஸால் உ.பி.யில் இருவர் உயிரிழப்பு! மொத்த உயிரிழப்பு 45 ஆனது!!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதுவரை உலகம் முழுவதும் 8 லட்சத்து 59 ஆயிரத்து 444பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை 42 ஆயிரத்தை 339 ஆக அதிகரித்துள்ளது.

patient

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று இருவர் உயிரிழந்துள்ளனர்.  உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில், மும்பை சென்று திரும்பி வந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் முதல் உயிரிழப்பு நடந்த சில மணி நேரத்திலேயே மற்றொரு முதியவரும் உயிரிழந்துள்ளார். மீரட்டைச் சேர்ந்த 72 வயதான அந்த முதியவர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் 103 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.