கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 686ஆக உயர்ந்தது…. மகாராஷ்டிரா முதலிடம்

 

கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 686ஆக உயர்ந்தது…. மகாராஷ்டிரா முதலிடம்

நம் நாட்டில் கொரோன வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 686ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்ச உயிர் இழப்புகள் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு அரசுகள் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகின்றன. இருப்பினும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

நேற்று மாலை நிலவரப்படி, நம் நாட்டில் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்க 686ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பான்மையான உயிர் இழப்புகள் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளன. அந்த மாநிலத்தில் மட்டும் கொரோனாவுக்கு 269 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு குஜராத்தில் கொரோனாவால் 103 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோானா வைரஸ்

கொரோனாவால் அதிக உயிர்பலியான டாப் 10 மாநிலங்கள்

மாநிலங்கள்        உயிர் இழப்புகள்
மகாராஷ்டிரா               269
குஜராத்                          103
மத்திய பிரதேசம்        081
டெல்லி                          048
ஆந்திர பிரதேசம்        027
ராஜஸ்தான்                 027
தெலங்கானா              024
உத்தர பிரதேசம்        021
தமிழ்நாடு                    018
கர்நாடகா                     017