கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யமாட்டேன் என மோடி தெரிவித்தார் – நாராயணசாமி

 

கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யமாட்டேன் என மோடி தெரிவித்தார் – நாராயணசாமி

கொரோனா வைரஸ் ஒழிப்பு விவகாரத்தில் அரசியல் செய்யமாட்டேன் என பிரதமர் மோடி தெரிவுத்ததாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் ஒழிப்பு விவகாரத்தில் அரசியல் செய்யமாட்டேன் என பிரதமர் மோடி தெரிவுத்ததாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “கொரோனா வைரஸ் ஒழிப்பு விவகாரத்தில் அரசியல் செய்யமாட்டேன் என பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் உறுதியளித்துள்ளார். மேலும் மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்படுமென கூறினார். 
மேலும் ரிசர்வு, ஹட்கோ, நபார்ட் வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி தள்ளுபடி மற்றும் கடனை கட்ட 6 மாத அவகாசம் தர பிரதமரிடம் கேட்கப்பட்டது. 

tt

மே.3 க்கு பிறகு மத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும் அரசின் வரி வருவாய் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் எனவும் கொரோனா பரிசோதனை செய்யும் கிட்டுகள் அனைத்து மாநிலங்களிலும் தட்டுப்பாடு உள்ளது அதை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் அனைத்து மாநிலங்களின் சார்பாக பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது” எனக்கூறினார்.