கொரோனா விளைவு – மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்தம்

 

கொரோனா விளைவு – மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்தம்

கொரோனா விளைவு காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி: கொரோனா விளைவு காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகம் முழுக்க பொருளாதார வீழ்ச்சி கடுமையாக உள்ளது. இதனால் நாட்டின் சுகாதாரத்துறைக்கு அதிக பணம் தேவைப்படுவதாலும், சமூகத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் மற்றும் ஏழைகளின் நலத்திட்டங்கள் தேவைப்படுகிறது. இதன் காரணமாக மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 2021-ஆம் ஆண்டு ஜூலை வரை நிறுத்தி வைப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Money

ஆனால் அகவிலைப்படி உயர்வு மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மற்றபடி அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படும் என நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2021 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையால் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். மத்திய நிதியமைச்சகத்தின் இந்த நடவடிக்கையால் 2021 மார்ச் வரை மத்திய அரசுக்கு ரூ.27 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.