கொரோனா விதிமுறையை மதிக்காத மக்கள்: கிருமி நாசினி தெளித்து களைத்த ஆணையர்!
Mar 29, 2020, 18:10 IST1585485659000
அரியலூர் காய்கறி சநதையில் மக்கள் நெருக்கடி இருப்பதால், சந்தையை அரசு மேல்நிலைப்பள்ளி திடலுக்கு மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அரியலூர் காய்கறி சநதையில் மக்கள் நெருக்கடி இருப்பதால், சந்தையை அரசு மேல்நிலைப்பள்ளி திடலுக்கு மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காய்கறி அங்காடியில் விதிகளை மதிக்காமல், இடைவெளி விடாமலும் காய்களை வாங்கிய பொதுமக்கள் மீது கிருமிநாசினியை தெளித்து பாடம் கற்பித்திருக்கிறார் நகராட்சி ஆணையர்.
கடைகளில் மக்கள் ஒருமீட்டர் இடைவெளி விட்டு பொருள்களை வாங்க வட்டமிடப்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகளும் அடிக்கடி ஒலிப்பெருக்கியின் வாயிலாக இடைவெளி விட்டு நிற்க அறிவுறுத்தியும் மதிக்காத மக்களால், அதிருப்தி அடைந்த நகராட்சி கமிஷனர் கிருமிநாசினியை பொதுமக்கள் மீது பிரயோகித்துள்ளார்.