கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

 

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

அரியலூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

death

அரியலூர் மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் நாராயணசாமி. கேரளாவில் பணியாற்றிவந்த இவர்,  காய்ச்சல் ஏற்பட்டதால் அரியலூர் தலைமை மருத்துவமனையில்  கடந்த 6 ஆம் தேதி கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரது ரத்த மாதிரியை கடந்த 7 ஆம் தேதி பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பரிசோதனை முடிவுகள் இன்னும் வராத நிலையில் மருத்துவமனையிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இதில் நாராயணசாமி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன